Obstructive Sleep Apnea (OSA) - அப் ஸ்ட்ரக் டிவ் ஸ்லீப் அப்னியா என்பது ஒரு வகையான தூக்க சம்பந்தமான பிரச்னை. இது உலகில் பல பேருக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அந்த பிரச்னை பற்றி அறியாமலோ அல்லது பெரிது படுத்தாமலோ இருந்து விடுகின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து சிகிச்சை செய்து விடுவது எளிது.
பிரச்சனையின் அறிகுறிகள் (Symptoms)
- தூங்கும் பொழுது மூச்சு விட முடியாமல் திடீரென விழித்து கொள்ளுதல்.
- வாய் வழியே மூச்சு விட முயன்று வாயை திறந்து கொண்டு தூங்குவது.
- அதிக குறட்டை. வினோதமான ஒலிகளில் குறட்டை.
- ஒரு பக்கமாக படுக்கும் போது மூச்சு விட முடியாமல் திணறுதல்.
- காலையில் எழுந்த உடன் சோர்வாக உணருதல்
- வேலை நேரத்தில் தூக்க உணர்வு
- தனிமையில் அமர்ந்து இருக்கும் போது தூங்கி விடுதல்
- வாகனம் ஓட்டும் போது தூக்க உணர்வு
- விழித்து இருக்கும் பொழுதே குறட்டை ஒலி
இவை அனைத்துமோ அல்லது இவற்றில் பெரும்பாலான அறிகுறிகளையோ நீங்கள் உணர்ந்தால் உங்களுக்கு OSA இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பிரச்சனையின் உடல் மூல காரணங்கள் (Physical Causes)
- மூச்சு பாதையில் அடைப்பு ஏற்படுதல்
- குறுகிய மூச்சு குழாய்
- பெரிதான உள் நாக்கு
- மூச்சு பாதையில் கட்டிகள் அல்லது அதிக சதை வளர்ச்சி
- தூங்கும் பொழுது மூச்சு பாதையை சுற்றி உள்ள அதிக சதை தொங்கி பிராண வாயு போக்குவரத்தை சீர் குலைத்தல்
- பின் சென்ற முக தாடை
பக்க விளைவுகள் (Side Effects)
- உடலுக்கு தேவையான பிராண வாயு (Oxygen) குறைந்து வயோதிக தன்மையை உணருதல்
- முடி நரைத்தல் மற்றும் உதிருதல்
- காலை சோர்வு மற்றும் காலையிலேயே தூங்குதல்
- வாகன ஓட்டும் பொழுது தூங்கி விபத்து நேரிட வாய்ப்புகள்
- அதிக சத்தமான குறட்டை மற்றும் திடுக்கிட்டு எழுதல்
- நாளடைவில் பிராண வாயு குறைவால் மாரடைப்பு, சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகள்
- உடல் பருமனடைதல்
நோய் கண்டுபிடிக்கும் முறைகள் (Diagnosis)
நாம் இந்த பிரச்சனைகளை உணரும் போது உடனடியாக ஒரு நல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவரை (ENT Doctor) அணுகுவது மிகவும் அவசியம். மருத்துவர் பரிசோதித்த பின்பு, இந்த பிரச்சனை இருப்பதை உறுதி செய்வதற்காக சில பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.
1. ஸ்லீப் எம்.ஆர்.ஐ. டெஸ்ட் (Sleep MRI Test) : இது ஒரு வகையான ஸ்கேன் எனப்படும் கதிர் ஒளியினால் உடல் ஊடுருவி எடுக்கப்படும் ஒரு சோதனை முறை. இதன் மூலம் மூச்சு பாதையில் உள்ள தடைகள் (கட்டி, சதை வளர்ச்சி, பெரிதான உள் நாக்கு, தாடை பின்னோக்கி நகர்ந்து இருத்தல்) கண்டறிய முடியும். நவீன ஸ்கேன் சென்டர்களில் இந்த வசதி உள்ளது. (கட்டணம் ஏறத்தாழ 8000 ரூபாய்)
2. ஓவர் நைட் போர் சேனல் ஸ்லீப் ஸ்டடி (Overnight Four Channel Sleep Study) : இந்த பரிசோதனை ஒரு இரவு முழுவதும் நோயாளியுடைய தூக்க முறையை கண்டு பிடிக்க உதவுவது. இந்த முறையில் ஒருவருடைய தூக்கம் எவ்வளவு முறை தடை படுகிறது, எவ்வளவு பிராண வாயு (Oxygen) தடை படுகிறது, எவ்வளவு நேரம் பிராண வாயு இல்லாமல் நோயாளி அவதி படுகிறார், இதய துடிப்பு போன்றவை பதிவு செய்ய படுகிறது. இந்த முறையில் சில கருவிகள் மார்பிலும் , வயிறிலும் இரண்டு பெல்ட் போன்ற பட்டையினால் பொருத்த பட்டு, இரு சிறிய குழாய்கள் மூலம் காற்று மூக்கிற்கு கொடுக்கப் படுகிறது. இந்த கருவிகளை பொருத்திக் கொண்டு நாம் நடக்க முடியும். இரவில் விழித்து இயற்கை உபாதைகளை கழிக்க முடியும். இதில் ஏ ஹெச் ஐ (AHI - Apnea Hypoapnea Index) என்ற அளவு பதிய படுகிறது. இந்த குறியீடு மொத்த தூக்க தடங்கல் நிகழ்வுகளை , மொத்த தூங்கும் மணிகளால் வகுத்து பெறப் படுகிறது. இந்த குறியீடு 30 அளவை தாண்டினால் நீங்கள் உறுதியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 30 அளவுக்கு கீழ் உள்ளவர்கள், பிரச்சனையை பெரிதாக விடாமல் முன் கூட்டிய வழி முறைகளை பின் பற்ற வேண்டும். இந்த வசதி பெரிய காது மூக்கு தொண்டை மருத்துவமனைகளிலும் மற்ற குறித்த பரிசோதனை கூடங்களிலும் கிடைக்கின்றன. (கட்டணம் ஏறத்தாழ 7000 ரூபாய்)
சிகிச்சை முறைகள் (Treatments)
இந்த பிரச்சனைக்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. நோயின் அளவு, நோயாளியின் வயது மற்றும் மற்ற உடல் உபாதைகளை பொறுத்து மருத்துவர் தக்க சிகிச்சை முறையை பரிந்துரைப்பார்.
ஏ ஹெச் ஐ (AHI - Apnea Hypoapnea Index) குறியீடு 30 க்கும் அதிகமாக இருக்கையில் பின் வரும் மருத்துவ முறைகள் பின் பற்ற படுகின்றன.
சிபாப் முகமூடி (CPAP (Coninuous Positive Airway Pressure) Mask): இந்த முகமூடி ஒரு வகையான பிராண வாயு செலுத்தும் இயந்திரம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வாயுவை மூக்கின் வழியாகவோ அல்லது மூக்கு மற்றும் வாய் வழியாகவோ செலுத்தி தூக்கத்தை தடை இல்லாமல் செய்யும். இந்த இயந்திரம் தற்பொழுது பல சிறிய அளவுகளில் பல மாற்றங்களுடன் வருகின்றன. இது தொடர்ந்து இரவில் தூங்கும் பொழுது பயன் படுத்த வேண்டும். பொதுவாக இம்முறை அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் பரிந்துரைக்கப் படுகிறது.
வயது குறைந்தவர்களுக்கும், சிபாப் முகமூடி அணிய விரும்பாதவர்களுக்கும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்க படுகிறது. அறுவை சிகிச்சை லேசர் முறையிலும், சாதாரண முறையிலும் செய்ய முடியும். இது குறிப்பாக எந்த இடத்தில் தடை நீக்கப் படுகிறது மற்றும் நோயாளியின் வாயின் அளவை பொறுத்து முடிவு செய்ய படுகிறது. லேசர் முறையில் ஒரு நாளில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு மறு நாள் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு எளிதானது. எந்த வகை அறுவை சிகிச்சை ஆனாலும் 2 முதல் 3 வார ஓய்வு அவசியம். இந்த சமயத்தில், அறுவை சிகிச்சை செய்த பகுதியில் எந்த கிருமி பரவலும் இல்லாமலும் காக்க வேண்டும். (கட்டணம் ஏறத்தாழ 70000 முதல் 80000 ரூபாய் வரை. காப்பீடு உடையவர்கள் எல்லா செலவுகளையும் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணபித்து பெறலாம் அல்லது பணம் இல்லாமலேயே குறித்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்)
மிக சிறந்த மருத்துவர்கள் நம் நாட்டிலேயே உள்ளனர். சென்னையில் உங்களுக்கு நல்ல மருத்துவர் உதவி தேவை பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். என்னுடைய மருத்துவரை அணுக உதவி செய்ய முடியும்.
சமூக பிரச்சனைகள் (Social Problems)
1. பிறருடன் தூங்கும் அறையை பகிர்ந்து தூங்க வேண்டியவர்கள் மிகவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக நேரிடும். மிக குறிப்பாக வேலை விஷயமாக நாம் மற்றவருடன் தங்க நேரிடும் பொழுது, உடன் தங்குபவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.
2 வாழ்க்கை துணைவருடன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு அல்லது தூக்கம் கெடும் வாய்ப்பு உண்டு.
3 விமானத்திலோ, புகை வண்டியிலோ, பேருந்திலோ நெடும் பயணம் புரியும் பொழுது அடுத்தவர் தூக்கம் கெட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். நான் சப்தமாக உறங்குவதை கண்டு அடுத்த பயணி, விமான பணிப் பெண்ணிடம் புகார் செய்ய, அவர் என் மனைவியிடம் என்னை எழுப்ப வேண்டிய பொழுது, என் மனைவி விமான பணியாளரிடம் நீண்ட வாக்குவாதத்தில் சண்டை போட்ட நிகழ்வுகளும் உண்டு.
4 ஓட்டுனர் போன்ற பணியில் இருப்போர், இந்த பிரச்னையில் இருக்கும் போது, அவரை நம்பி பயணிக்கும் பயணிகளின் உயிருக்கும் அவர் பொறுப்பாவார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions)
இவை அனைத்தையும் கடை பிடிக்காததே முதற் காரணங்களாக இருக்க கூடும். எனவே அனைவரும் இந்த வழி முறைகளை கடை பிடித்து ஆரோக்யமாக வாழ்வோம்.
பின் குறிப்பு:
இந்த பதிவு ஒரு நோயாளியின் கண்ணோட்டத்தில் எழுதப் பட்டது. சில கருத்துகள் தவறாக புரியப் பட்டவையாக இருக்கலாம். இது ஒரு மருத்துவரால் எழுதப் பட்டது அல்ல. எனவே இதனை தக்க மருத்துவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். நிறைய ஆங்கில பதிவுகளும், வலை மனைகளும் இந்த பிரச்னை பற்றி எழுதி இருப்பதாலும் தமிழகத்தில் இந்த பிரச்சனை ஒரு பெரிய நோயாக கருத படாததாலும் இதனை தமிழில் பதிய முயன்று இருக்கின்றேன்.
நாம் இந்த பிரச்சனைகளை உணரும் போது உடனடியாக ஒரு நல்ல காது, மூக்கு, தொண்டை மருத்துவரை (ENT Doctor) அணுகுவது மிகவும் அவசியம். மருத்துவர் பரிசோதித்த பின்பு, இந்த பிரச்சனை இருப்பதை உறுதி செய்வதற்காக சில பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.
1. ஸ்லீப் எம்.ஆர்.ஐ. டெஸ்ட் (Sleep MRI Test) : இது ஒரு வகையான ஸ்கேன் எனப்படும் கதிர் ஒளியினால் உடல் ஊடுருவி எடுக்கப்படும் ஒரு சோதனை முறை. இதன் மூலம் மூச்சு பாதையில் உள்ள தடைகள் (கட்டி, சதை வளர்ச்சி, பெரிதான உள் நாக்கு, தாடை பின்னோக்கி நகர்ந்து இருத்தல்) கண்டறிய முடியும். நவீன ஸ்கேன் சென்டர்களில் இந்த வசதி உள்ளது. (கட்டணம் ஏறத்தாழ 8000 ரூபாய்)
2. ஓவர் நைட் போர் சேனல் ஸ்லீப் ஸ்டடி (Overnight Four Channel Sleep Study) : இந்த பரிசோதனை ஒரு இரவு முழுவதும் நோயாளியுடைய தூக்க முறையை கண்டு பிடிக்க உதவுவது. இந்த முறையில் ஒருவருடைய தூக்கம் எவ்வளவு முறை தடை படுகிறது, எவ்வளவு பிராண வாயு (Oxygen) தடை படுகிறது, எவ்வளவு நேரம் பிராண வாயு இல்லாமல் நோயாளி அவதி படுகிறார், இதய துடிப்பு போன்றவை பதிவு செய்ய படுகிறது. இந்த முறையில் சில கருவிகள் மார்பிலும் , வயிறிலும் இரண்டு பெல்ட் போன்ற பட்டையினால் பொருத்த பட்டு, இரு சிறிய குழாய்கள் மூலம் காற்று மூக்கிற்கு கொடுக்கப் படுகிறது. இந்த கருவிகளை பொருத்திக் கொண்டு நாம் நடக்க முடியும். இரவில் விழித்து இயற்கை உபாதைகளை கழிக்க முடியும். இதில் ஏ ஹெச் ஐ (AHI - Apnea Hypoapnea Index) என்ற அளவு பதிய படுகிறது. இந்த குறியீடு மொத்த தூக்க தடங்கல் நிகழ்வுகளை , மொத்த தூங்கும் மணிகளால் வகுத்து பெறப் படுகிறது. இந்த குறியீடு 30 அளவை தாண்டினால் நீங்கள் உறுதியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 30 அளவுக்கு கீழ் உள்ளவர்கள், பிரச்சனையை பெரிதாக விடாமல் முன் கூட்டிய வழி முறைகளை பின் பற்ற வேண்டும். இந்த வசதி பெரிய காது மூக்கு தொண்டை மருத்துவமனைகளிலும் மற்ற குறித்த பரிசோதனை கூடங்களிலும் கிடைக்கின்றன. (கட்டணம் ஏறத்தாழ 7000 ரூபாய்)
சிகிச்சை முறைகள் (Treatments)
இந்த பிரச்சனைக்கு பல சிகிச்சை முறைகள் உள்ளன. நோயின் அளவு, நோயாளியின் வயது மற்றும் மற்ற உடல் உபாதைகளை பொறுத்து மருத்துவர் தக்க சிகிச்சை முறையை பரிந்துரைப்பார்.
ஏ ஹெச் ஐ (AHI - Apnea Hypoapnea Index) குறியீடு 30 க்கும் அதிகமாக இருக்கையில் பின் வரும் மருத்துவ முறைகள் பின் பற்ற படுகின்றன.
சிபாப் முகமூடி (CPAP (Coninuous Positive Airway Pressure) Mask): இந்த முகமூடி ஒரு வகையான பிராண வாயு செலுத்தும் இயந்திரம் ஆகும். இது ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் வாயுவை மூக்கின் வழியாகவோ அல்லது மூக்கு மற்றும் வாய் வழியாகவோ செலுத்தி தூக்கத்தை தடை இல்லாமல் செய்யும். இந்த இயந்திரம் தற்பொழுது பல சிறிய அளவுகளில் பல மாற்றங்களுடன் வருகின்றன. இது தொடர்ந்து இரவில் தூங்கும் பொழுது பயன் படுத்த வேண்டும். பொதுவாக இம்முறை அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கும், வயதானவர்களுக்கும் பரிந்துரைக்கப் படுகிறது.
வயது குறைந்தவர்களுக்கும், சிபாப் முகமூடி அணிய விரும்பாதவர்களுக்கும், அறுவை சிகிச்சை பரிந்துரைக்க படுகிறது. அறுவை சிகிச்சை லேசர் முறையிலும், சாதாரண முறையிலும் செய்ய முடியும். இது குறிப்பாக எந்த இடத்தில் தடை நீக்கப் படுகிறது மற்றும் நோயாளியின் வாயின் அளவை பொறுத்து முடிவு செய்ய படுகிறது. லேசர் முறையில் ஒரு நாளில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு மறு நாள் வீட்டிற்கு செல்லும் அளவிற்கு எளிதானது. எந்த வகை அறுவை சிகிச்சை ஆனாலும் 2 முதல் 3 வார ஓய்வு அவசியம். இந்த சமயத்தில், அறுவை சிகிச்சை செய்த பகுதியில் எந்த கிருமி பரவலும் இல்லாமலும் காக்க வேண்டும். (கட்டணம் ஏறத்தாழ 70000 முதல் 80000 ரூபாய் வரை. காப்பீடு உடையவர்கள் எல்லா செலவுகளையும் காப்பீட்டு நிறுவனத்தில் விண்ணபித்து பெறலாம் அல்லது பணம் இல்லாமலேயே குறித்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்)
மிக சிறந்த மருத்துவர்கள் நம் நாட்டிலேயே உள்ளனர். சென்னையில் உங்களுக்கு நல்ல மருத்துவர் உதவி தேவை பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். என்னுடைய மருத்துவரை அணுக உதவி செய்ய முடியும்.
சமூக பிரச்சனைகள் (Social Problems)
1. பிறருடன் தூங்கும் அறையை பகிர்ந்து தூங்க வேண்டியவர்கள் மிகவும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக நேரிடும். மிக குறிப்பாக வேலை விஷயமாக நாம் மற்றவருடன் தங்க நேரிடும் பொழுது, உடன் தங்குபவர்களின் கேலிக்கு ஆளாக நேரிடும்.
2 வாழ்க்கை துணைவருடன் இது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உண்டு அல்லது தூக்கம் கெடும் வாய்ப்பு உண்டு.
3 விமானத்திலோ, புகை வண்டியிலோ, பேருந்திலோ நெடும் பயணம் புரியும் பொழுது அடுத்தவர் தூக்கம் கெட்டு தர்ம சங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். நான் சப்தமாக உறங்குவதை கண்டு அடுத்த பயணி, விமான பணிப் பெண்ணிடம் புகார் செய்ய, அவர் என் மனைவியிடம் என்னை எழுப்ப வேண்டிய பொழுது, என் மனைவி விமான பணியாளரிடம் நீண்ட வாக்குவாதத்தில் சண்டை போட்ட நிகழ்வுகளும் உண்டு.
4 ஓட்டுனர் போன்ற பணியில் இருப்போர், இந்த பிரச்னையில் இருக்கும் போது, அவரை நம்பி பயணிக்கும் பயணிகளின் உயிருக்கும் அவர் பொறுப்பாவார்.
முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions)
- நேரம் தவறாமல் தூங்குதல்
- காலத்தில் உணவு உட்கொள்ளுதல்
- அளவாக உண்ணுதல்
- போதிய உடல் பயிற்சி செய்தல்
- மது மற்றும் புகை பழக்கங்களை கை விடுதல்
- அதிகமாக குளிர் பானங்களை தவிர்த்தல்
- மூச்சு பயிற்சி மேற்கொள்ளுதல்
- சுத்தமான படுக்கையில் உறங்குதல்
இவை அனைத்தையும் கடை பிடிக்காததே முதற் காரணங்களாக இருக்க கூடும். எனவே அனைவரும் இந்த வழி முறைகளை கடை பிடித்து ஆரோக்யமாக வாழ்வோம்.
பின் குறிப்பு:
இந்த பதிவு ஒரு நோயாளியின் கண்ணோட்டத்தில் எழுதப் பட்டது. சில கருத்துகள் தவறாக புரியப் பட்டவையாக இருக்கலாம். இது ஒரு மருத்துவரால் எழுதப் பட்டது அல்ல. எனவே இதனை தக்க மருத்துவரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். நிறைய ஆங்கில பதிவுகளும், வலை மனைகளும் இந்த பிரச்னை பற்றி எழுதி இருப்பதாலும் தமிழகத்தில் இந்த பிரச்சனை ஒரு பெரிய நோயாக கருத படாததாலும் இதனை தமிழில் பதிய முயன்று இருக்கின்றேன்.
Comments