Skip to main content

Posts

Showing posts from April, 2012

சொல்லத்தான் நினைக்கிறேன்

நான் ஏன் ட்ரெயின் டிக்கெட் எடுக்கும் போது தப்பு பண்ணுகிறேன் என்று தெரிய வில்லை. இரண்டாவது முறையாக மாலை 4 30 மணிக்கு பதிலாக காலை ட்ரெயினில் புக் பண்ணி விட்டு கடைசி நிமிடத்தில் டிக்கெட்டை பார்க்கிறேன். காமெடி என்னன்னா டிக்கெட் புக் பண்ணுவது 2 மாதத்திற்கு முன்பு. ரொம்ப முன் ஜாக்கிரதை முத்தன்னவாக இருந்தாலும் பல்பு வாங்குகிறோம் அப்பப்போ... முதலில் ட்ரெயின் டிக்கெட்டில் ரயில்வே டைம் பிரிண்ட் பண்ணுவதை ஸ்டாப் பண்ண சொல்ல வேண்டும். AM  மற்றும் PM  என்று தெளிவாக பிரிண்ட் பண்ண சொல்லி முகுல் ராய்க்கு சொல்ல வேண்டும்... அவர்தானே ரயில்வே மினிஸ்டர்? இல்ல அவரையும் தூகிட்டான்களா? இருபது நாள் முன்னால் கர்ணன் படம் புக் பண்ணி சத்யம் தியேட்டரில் பார்க்க நேரிட்டது... என்ன ஒரு படம்... நம்ம செவாலியே பர்பாமான்ஸ் ரொம்ப பிரமாதம்... உடம்பு முழுவதும் நடிக்கிறது.. சில சீன்ல கொடுத்த பேமண்டுக்கு மேல் பர்பாமான்ஸ் கொடுத்து இருக்கார். இது போல் சில பழைய படங்கள் ரிலீஸ் செஞ்சா நாங்க வந்து பாக்க ரெடி... குறிப்பா கமல் படங்கள் திரும்ப பார்க்க ஆசை. தேவர் மகன், விருமாண்டி, நாயகன், சிங்கார வேலன், மைகேல் மதன காமராஜன்...

மதில் மேல் மனசு

நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது... அதற்கு ஒரு தனி ஆர்வமும் நேரம் ஒதுக்கி முயற்சிப்பதும் அவசியம்... பகிர்ந்து கொள்ள நினைத்து பதிய முடியாமல் போன விஷயங்கள் நிறைய... 1 சென்னை புத்தக கண்காட்சியும் அதில் வாங்கிய புத்தகங்களும்... அநேகமாக 2 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக கண்காட்சியில் முதல் முறையாக செல்ல நேர்ந்தது... ஒரே இடத்தில அனைத்து பதிப்பகங்களும் திரண்டு இருந்தது வாசகர்களுக்கு ஏக கொண்டாட்டம். அனைத்து ஸ்டால்களையும் ஒரு மாலையில் பார்வையிடுவது முடியாத காரியம். ஒரு முழு நாள் தேவை. பாதி கூட்டம் வெளியில் உள்ள சாப்பாட்டு ஸ்டால்களை மட்டுமே டார்கெட் செய்து வந்திருந்தது. ஒரு கூட்டம் பொழுது போக்கிற்காக வெளி மைதானத்தில் நடந்த மியூசிக் ஆர்கெஸ்ட்ரா கேட்டு கொண்டு கடலை சாப்பிட்டு கொண்டு இருந்தது... கண் தெரியாத இளைஞர் ஒருவர் கஷ்டமான "என்னமோ ஏதோ" என்ற "கோ" பட பாடலை ரசித்து பாடினார். நான் புத்தகங்களை வாங்குவதில் மிக சிரமப் பட்டு விட்டேன். எதை எடுக்க எதை விட என்று புரிய வில்லை. கடைசியாக "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" - சுஜாதா, "வாஷிங்டனில் த...