வணக்கம். இந்த அண்ட சராசரத்தில் மனிதனுக்குத்தான் எவ்வளவு வழிகள் இன்பத்தினை தேடுவதற்கு....? நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் அந்த இன்பத்தினை தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்... அல்லது அந்த இன்பம் நமக்கு வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம்... பள்ளியில் படிக்கையில், நல்ல கல்லூரியில் சேர்ந்து விட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுவோம்... கல்லூரியில் படிக்கும் காலத்தில், ஒரு நல்ல வேலை கிடைத்த உடன் மகிழ்ச்சி வரும் என்று எண்ணி இருப்போம். வேலை கிடைத்தால் பதவி உயர்வு வேண்டும், பிறகு திருமணம் ஆக வேண்டும், பிறகு குழந்தை வேண்டும், பிறகு அந்த குழந்தைக்கு நல்ல பள்ளி வேண்டும்... இந்த சக்கரத்தில் நாம் நிகழ் காலத்தில் இன்பமாக இருக்கவே மறந்து விடுகிறோம்....
இன்பம் அல்லது மகிழ்ச்சி என்பதனை இரு வகையாக பிரிக்கலாம்.. ஒன்று தற்காலிக இன்பம்.. ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு சில நாட்களோ நீடிக்கும் இன்பங்கள். சிலர் இதனை சிற்றின்பம் என்றும் கூறுவர். இரண்டாம் வகை நீடித்து நிலைக்கும் இன்பம்... இவை ஒரு குறித்த நிகழ்வு மூலமோ அல்லது ஒரு கால முதிர்வு மூலமோ நடப்பவை அல்ல... இவ்வகையான இன்பம் கிடைக்க வேண்டும் எனில் அதன் பின்பு ஒரு தொடர்ந்த பயிற்சி அல்லது கட்டுப்பாடு தேவை. உதாரணமாக ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல உடற்பயிற்சியும், நல்ல உணவு பழக்க வழக்கங்களும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையும் அவசியம். இது ஒரு நாளில் கிடைப்பது அல்ல..
உலகில் பல பேரின்பங்கள் இருக்க நாம் சிற்றின்ப வாழ்வை மட்டும் தெரிந்தெடுத்து பல நேரம் துன்பங்களுக்கு ஆளாகி விடுகிறோம்....
நெடு நாட்களுக்கு பின்பு, தமிழில் எழுத ஆவலாய் இருந்தது... எனவே நான் என்னுடைய அனுபவங்களை இப்போது என் தொண்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் போது எழுதுகிறேன்.
கடந்த வாரத்தில் Obstructive Sleep Apnea (OSA) என்ற பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை பெற்றேன். இதைப் பற்றி என்னுடைய அடுத்த பதிவில் விளக்கமாக பதிய விரும்புகிறேன்...
Comments