Skip to main content

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்??

வணக்கம். இந்த அண்ட சராசரத்தில் மனிதனுக்குத்தான் எவ்வளவு வழிகள் இன்பத்தினை தேடுவதற்கு....? நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் அந்த இன்பத்தினை தேடி அலைந்து கொண்டு இருக்கிறோம்... அல்லது அந்த இன்பம் நமக்கு வரும் என்று காத்துக் கொண்டு இருக்கிறோம்... பள்ளியில் படிக்கையில், நல்ல கல்லூரியில் சேர்ந்து விட்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணுவோம்... கல்லூரியில் படிக்கும் காலத்தில், ஒரு நல்ல வேலை கிடைத்த உடன் மகிழ்ச்சி வரும் என்று எண்ணி இருப்போம். வேலை கிடைத்தால் பதவி உயர்வு வேண்டும், பிறகு திருமணம் ஆக வேண்டும், பிறகு குழந்தை வேண்டும், பிறகு அந்த குழந்தைக்கு நல்ல பள்ளி வேண்டும்... இந்த சக்கரத்தில் நாம் நிகழ்  காலத்தில் இன்பமாக இருக்கவே மறந்து விடுகிறோம்....

இன்பம் அல்லது மகிழ்ச்சி என்பதனை இரு வகையாக பிரிக்கலாம்.. ஒன்று தற்காலிக இன்பம்..  ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு சில நாட்களோ நீடிக்கும் இன்பங்கள். சிலர் இதனை சிற்றின்பம் என்றும் கூறுவர்.  இரண்டாம் வகை நீடித்து நிலைக்கும் இன்பம்... இவை ஒரு குறித்த நிகழ்வு மூலமோ அல்லது ஒரு கால முதிர்வு மூலமோ நடப்பவை அல்ல... இவ்வகையான இன்பம் கிடைக்க வேண்டும் எனில் அதன் பின்பு ஒரு தொடர்ந்த பயிற்சி அல்லது கட்டுப்பாடு தேவை. உதாரணமாக ஆரோக்கியமான வாழ்வுக்கு நல்ல உடற்பயிற்சியும், நல்ல உணவு பழக்க வழக்கங்களும், கட்டுப்பாடான வாழ்க்கை முறையும் அவசியம். இது ஒரு நாளில் கிடைப்பது அல்ல..

உலகில் பல பேரின்பங்கள் இருக்க நாம் சிற்றின்ப வாழ்வை மட்டும் தெரிந்தெடுத்து பல நேரம் துன்பங்களுக்கு ஆளாகி விடுகிறோம்....

நெடு நாட்களுக்கு பின்பு, தமிழில் எழுத ஆவலாய் இருந்தது... எனவே நான் என்னுடைய அனுபவங்களை இப்போது என் தொண்டை அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் போது எழுதுகிறேன்.

கடந்த வாரத்தில் Obstructive Sleep Apnea (OSA) என்ற பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை பெற்றேன். இதைப் பற்றி என்னுடைய அடுத்த பதிவில் விளக்கமாக பதிய விரும்புகிறேன்...







Comments

Popular posts from this blog

My Prayer

"Vaan Muhil Valaathu Peiga Mali Valam Surakka Mannan Kon Murai Arasu Seiga Kuraivilaathu Uyirgal Vaazgha, Naan Marai Arangal Onga Natravam Velvi Malga Menmai Kol Saiva Needhi Vilanguga Ulagam Ellam" "வான் முகில் வளாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க, நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் " Translation "Good enough rain for the world Quality soil Resource for cultivation King who rules as per justice and good guidelines Problem free life for all lives Large implementations of 4 vedas in society More existence of Good Prayers and Yaagas Upliftment of saivait rules (Guidelines of People who worship Lord Shiva) in all over the world" This is the prayer I used to recite in my 30 seconds of prayer time every day, eventhough I am not very serious about he second paragraph. I used to hear it in most of the prayers in temples and prayer mee...

ஆடி மாத அடாவடிகள்

மன்மத வருடத்தில் நாளை கடைசி ஆடி வெள்ளி.  ஒரு பக்கம் எல்லா கடைகளும் ஆடி தள்ளுபடின்னு விலைய ஏத்தி அத பெரிசா 50%, 70% கழிவுன்னு சொல்லி விளம்பரம் கொடுக்க, இன்னொரு பக்கம் இந்த பக்த கேடிகள், சாரி பக்த கொடிகள் தெருவுக்கு தெரு பண்ணும் அட்டகாசங்கள் தாங்க முடியல. ஆடி மாசம் வெள்ளி கிழமைல வண்டி எடுக்கறதுக்கு பயமா இருக்கு. நல்லா  போட்ட ரோட்ட குழி தோண்டி, பந்தல் போட்டு, நடு வீதியில ட்ராபிக்க மறிச்சு, கூழ் ஊத்தி, புஷ்பவனம் குப்பு சாமிய கூட்டி வந்து கச்சேரி நடத்தி, பெரிய பெரிய சாமி உருவ சீரியல் செட் போட்டு, ஒரு கிலோ மீட்டருக்கு ட்யுப் லைட் போட்டு ஒரு வழி பண்ணி, எல்லா அம்மன் கோயில் இருக்கும் ஏரியாவையும் ஒன் வேயா மாத்தி, லௌட் ஸ்பீக்கற அலற விட்டு  மக்களை நாத்திகர்களாக மாற்றி கொண்டு இருக்குறாங்க. இவங்க பண்ற செலவுல இருக்குற கோயில விட பெரிய கோயிலே கட்டலாம். கோயிலே பத்துக்கு பத்து அளவுதான். அதுக்கு பந்தல் அது மாதிரி பத்து மடங்கு.  இது இப்படியே போனா விவேக் சொல்ற மாதிரி பத்து பெரியார் உருவானாலும் ஆச்சரிய பட முடியாது. இவங்க மக்கள் கிட்ட வசூல் பண்ற காச வச்...

மதில் மேல் மனசு

நிறைய எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது... அதற்கு ஒரு தனி ஆர்வமும் நேரம் ஒதுக்கி முயற்சிப்பதும் அவசியம்... பகிர்ந்து கொள்ள நினைத்து பதிய முடியாமல் போன விஷயங்கள் நிறைய... 1 சென்னை புத்தக கண்காட்சியும் அதில் வாங்கிய புத்தகங்களும்... அநேகமாக 2 மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக கண்காட்சியில் முதல் முறையாக செல்ல நேர்ந்தது... ஒரே இடத்தில அனைத்து பதிப்பகங்களும் திரண்டு இருந்தது வாசகர்களுக்கு ஏக கொண்டாட்டம். அனைத்து ஸ்டால்களையும் ஒரு மாலையில் பார்வையிடுவது முடியாத காரியம். ஒரு முழு நாள் தேவை. பாதி கூட்டம் வெளியில் உள்ள சாப்பாட்டு ஸ்டால்களை மட்டுமே டார்கெட் செய்து வந்திருந்தது. ஒரு கூட்டம் பொழுது போக்கிற்காக வெளி மைதானத்தில் நடந்த மியூசிக் ஆர்கெஸ்ட்ரா கேட்டு கொண்டு கடலை சாப்பிட்டு கொண்டு இருந்தது... கண் தெரியாத இளைஞர் ஒருவர் கஷ்டமான "என்னமோ ஏதோ" என்ற "கோ" பட பாடலை ரசித்து பாடினார். நான் புத்தகங்களை வாங்குவதில் மிக சிரமப் பட்டு விட்டேன். எதை எடுக்க எதை விட என்று புரிய வில்லை. கடைசியாக "ஸ்ரீரங்கத்து தேவதைகள்" - சுஜாதா, "வாஷிங்டனில் த...